வேறு பல மொழிகட்கும் இல்லாத சிறப்பு நம் தமிழ் மொழியில் எண்களுக்கு எழுத்துரு இருப்பது இவ்வெழுத்துருவை நம் சந்ததியினர் பலரும் மறந்து/இழந்து வருகிறோம். ஆகவே எல்லோர் வீட்டிலும், எங்கேயும் இருக்கும் அளவிற்கு இதை கொண்டு வர என்னால் முடிந்த முயற்சி இதோ இப்படத்தில் பார்ப்பதுதான் அது

இரண்டுமுரையிலுமே சிலர் உபயோகிக்கக்கண்டேன் ஆதலால் தங்களுக்கு சரியென்பதை உபயோகிக்கவும்

ஆம் நாம் எந்தவொறு வேறுபாடுமின்றி எல்லா இடத்திலும் எப்போதும் உபயோகிக்கும் கடிகாரந்தானது இதற்கு மொழி ஒரு தடையல்ல ஆனாலும் மொழிக்கு முக்கியத்துவம் இல்லாத இவ்விடத்தில் இதை புகுத்தக்காரணம், நாம் நேரம் பார்க்க அவற்றில் இருக்கும் எழுத்துக்கள் முக்கியமில்லை (எ.டு) நம் பெரும்பாலான சுவர்கடிகாரத்திலும், கைக்கடிகாரத்திலும் ரோமானியா எழுதுக்களைதாங்கி வருகின்றன அதை பயன்படுத்த யாருக்கும் சிரமமில்லை அதுபோல் இதையும் பயன்படுத்துவோம், " சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் வாய்ப்பழக்கம் " என்பதற்க்கேற்ப (இங்கே தமிழுக்கே இந்த எடுத்துக்காட்டு என்ன கொடுமையிது ) காலப்போக்கில் இத்தமிழ் எழுத்துரு நமக்குப்பழகிப்போகும் , ஆகவே நாம் நம்மால் இயன்ற இடத்திலெல்லாம் இக்கடிகாரத்தை நிறுவுவோம் இனி வளரும் எதிர்காலம் இதில் பயன்பெறும் .
வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !
இப்படிக்கு

No comments:
Post a Comment