Thursday, November 11, 2010

படித்ததில் பிடித்தது - விகடனின் இலவச தளம்


 ஆனந்த விகடனை இலவசமாக வலையில் படிக்கலாம் என்ற என் எண்ணம் ஈடேறவில்லை அது நேராக சந்தா செலுத்தும் இடம் நோக்கியே செல்கிறது இது இனி உதவாது என்றெண்ணி கொண்டிருந்தபோது இந்த முகவரி கிடைத்தது. அதில் கல்வி - தகவல், வேலைவாய்ப்பு, வழிகாட்டி ,, கதை கட்டுரை, கவிதை படைப்புகள் நம் போன்ற பதிவர்களின் பதிப்புத்தொகுப்பும் தனியே இடம் பெற்றுள்ளது அதில் கிட்டத்தட்ட எல்லா துறையையும் நம் போன்றவர்கள் அலசியுள்ளார்கள். ஆனாலும் இன்றும் பலர் வலையில் பார்த்து தனக்குப்பிடித்ததை தன் இடுகைகளில்  வெட்டியொட்டும் பழக்கதைக்கொண்டிருக்கிறார்கள் அது மட்டுமே வேதனைக்குரியது . ஆகவே நம் இடுகையில் அப்படியொரு அபத்தம் நிகழ்வதில்லை எதை எங்கே பார்த்தோமோ அங்கு நம் வாசகரையும் அழைத்துச்செல்வதே நம் பழக்கம்

 இடுகைகளின் தொகுப்பு 
 புகைப்படக்கழஞ்சியம்
ஆக்கங்களின் தொகுப்பு புகைப்படம், குறும்படம், கலைகள்  

Sunday, November 07, 2010

பார்த்ததில் பிடித்தது - தமிழ் பற்றிய ஒரு ஆரோக்யமான அலசல்

ன்று சின்னத்திரை என்பது கருத்துகளை அனைவரிடத்திலும் சுலபமாக கொண்டு சேர்க்க உதவும் ஒரு நல்ல ஊடகம், அதில் தமிழ் சார்ந்த தமிழ் சம்பந்தப்பட்டவைகள் எவ்வளவு என்று பார்த்தோமேயானால் அது சற்று குறைவே எனலாம், ௨௪ மணி நேரமும் நாடகங்களும், திரைப்படங்களுமே பெரும்பாலான இடத்தைப்பெருகின்றன. ஒரு சில மட்டுமே தமிழுக்கு கொஞ்சம் இடம் கொடுப்பதாகத்தெரிகிறது அவற்றுள் சில பொதிகை , மக்கள் , விஜய் என இப்பட்டியல் நீளும் ,

இங்கு குறிப்பாக ஒரு நிகழ்ச்சியை எடுத்துக்காட்டாகப்பார்ப்போம்

விஜயின் நீயா நானா - தமிழ் பற்றிய ஒரு விவாதம்

நிகழ்ச்சியின் சாரம் இங்கு சொடுக்கிப்பெற்றுக்கொள்ளவும்

இந்நிகழ்ச்சிக்காக பாராட்டு/நன்றி பெறுகிறவர்கள்

திரு.ஜெகத் காஸ்பர் ராஜ் - நம்முடைய இந்த கேடுகெட்டத்தனங்களையும் தாண்டி தமிழ் ஈராயிரம் ஆண்டுகள் வாழ்ந்து செழித்திருக்கிறது

திரு. சி. கோபிநாத் - எப்போதும்போல் சிறப்பான ஆரோக்யமான ஒரு விவாதத்தை நம் முன் கொடுத்ததற்காக

திரு. அழகேசன் பாண்டியன் - நிகழ்ச்சியில் பங்கு பெற்று உரையாற்றியவர்

Tuesday, October 19, 2010

பறவைகள் ஒரு பகுத்தாய்வு

தாயகத்தை தமிழகமாகக் / தமிழாகக் கொள்ளாதவற்றுக்கே தமிழ்ப்பெயர் சூட்டும் நாம் தமிழகத்திலுள்ள பறவையினங்களின் பெயர்களை அறியாமலிருத்தல் சரியல்லவே ஆதலால் இப்பதிவில் சில பதிவர்கள் பதிந்தவற்றை உங்களுக்கு தொகுத்து வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன்

பறவையினப்பிரிவை நான்கு பாகங்களாக பிரித்து தொகுத்துள்ளார் இவர்

கற்க நிற்க

சேவலைப்பற்றிய அழகான தொகுப்பு இங்கே

கொக்.....கொக்கரக்கோ.... கோ!!!

என்ற தலைப்பில் பழமைபேசி என்பவர் தொகுத்துள்ளார்.

Wednesday, October 06, 2010

தமிழ் சுடோகு

இந்நாட்களில் சுடோகு போடாத கையும் செல்போன் இல்லாத பையும் தண்டம் எனலாம் இவ்விரண்டும் இக்காலத்தினரிடம் அவ்வளவு ஆழமாக படிந்து விட்ட ஒன்று இந்த சுடோகு நம் தாய் மொழியில் இருந்தால் எவளவு நன்றாக இருக்கும் பாருங்கள்
 

வலையில் சுடோகு விழையாட சில வழி உள்ளது எடுத்துக்காட்டு
சுடோகு

ஆனால் இங்கு தமிழ் எண்களுக்கு பதிலாக உயிரெழுத்துக்களை உபயோகிக்கின்றனர் ஆனாலும் அதில் சிறு பிழையுள்ளது ஐ -கு பதிலாக ஜ  இட்டு தமிழ் பிழையுடன் இருக்கிறது விரைவில் மாற்றுவார்கள் என்று எண்ணுகிறேன் 

Thursday, August 26, 2010

மிதி வண்டி

இப்போது நாம் அலசவிருக்கும் தலைப்பு மிதி வண்டி


இப்பதினயொத்தவை
அருளின் வலைப்பதிவு

டென்மார்க்கின் கோபன்ஹெகன் நகருக்கு சென்ற போது - அங்கு மிதிவண்டிக்காக செய்யப்பட்டிருந்த வசதிகளையும் அங்குள்ளவர்கள் கொட்டும் பனியிலும் மிதிப்பதைப்போன்று இங்கு இந்தியாவில் > தமிழகத்தில் > கும்பகோணம் என்ற அழகிய ஊரில் நான் கண்டேன்

ஆயில்யன் பதிவுகள்

Sunday, August 01, 2010

தமிழில் வலை உலவிகள் ஒரு பார்வை

பல வலையுலாவிகள் தினம் தினம் வந்த வண்ணம் உள்ளன அவற்றுள் சிலவற்றை இங்கு பார்ப்போம்


நம் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சில

வலையோடி

காவியம்  - இந்தியாவின் முதல் உள்நாட்டு உலவி என்று கூறுகின்றனர் மொசில்ல பிறேபாக்சின் இயக்கியையே இதுவும் பின்பற்றுவதால் நாம் கையாள்வதில் எந்த சிரமும் இல்லை இதன் ஒரு முக்கிய பயன் தமிழில் இட எந்த பிற மென்பொருளும் இல்லாமல் இடுவதாகும்

ஒபேரா ௯.௬  

இது பழைய உலவியானாலும் இது தமிழில் கையாள உதவுகிறது  தற்போது ஒபேர ௰. வரை வந்துவிட்டது

Wednesday, July 14, 2010

மன்னிக்கவும் வேலைப்பழுவில் மறந்துவிட்டேன் !@#$*&+

நம் அருமை குழந்தைகளின் பிறந்த நாளை மறந்துவிட்டு விழிபிதுங்கி செய்வதறியாது நிற்க வேண்டியதில்லை அதற்கு ஒரு ஆக்கப்பூர்வமான வழி.

இனி நமது மணநாளை மறந்து அவளிடம்/அவரிடம் ஊடல் கொள்ள வேண்டியதில்லை மணநாளையும் இதுபோலிட்டுக்கொள்ளலாம்.

Monday, July 12, 2010

தமிழர் அறிய வேண்டிய தமிழர்

ஆதி முதல் இன்று வரை


மாதவச் சிவஞான முனிவர்
மு. வரதராசனார்
வீரமாமுனிவர்
சுப்பிரமணிய பாரதி
பரிதிமாற் கலைஞர்
உ . வே . சாமிநாத ஐயர்
சி. வை. தாமோதரம்பிள்ளை

மா.நன்னன்
வி.வைரமுத்து

இப்பட்டியல் முழுமையற்றது மிகச்சிலரை மட்டுமே குறிக்கிறது
அனைவரையும் ஒரு இடுகையில் அடக்குவதென்பது இயலாத காரியம் சிலமட்டுமே மேலே குறிப்பிடப்பெற்றுள்ளது

தமிழறிஞர் தேடுபட்டியல்

மழலைகளுக்கு இனிய தமிழ்ப்பெயர்கள்

மழலையர்களுக்கு இனிய தமிழில் பெயர் சூட்டும் பொருட்டு வலையில் தேடிய போது கிடைத்த சில நல்ல தளங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் பெயர் பட்டியல் இதோ இங்கு சொடுக்கி பெற்றுக்கொள்ளவும்

தமிழ்ப்பெயர்கள் தொடர்பு ௧

தமிழ்ப்பெயர்கள் தொடர்பு ௨

அன்புத்தமிழ் மற்றும் தமிழ்கூடல்என்னும் வலையில் ஆண்
பெண் குழந்தை பெயர்கள் தனித்தனியே பட்டியலிட்டிருக்கின்றன

Wednesday, July 07, 2010

என்ன கொடுமையிது

சென்னை: தமிழக அபிவிருத்தி திட்டத்திற்காக உலக வங்கியிடம் சுமார் 3 ஆயிம் கோடிகளை மேலும் கடன் வாங்கினார் தமிழக முதல்வர் கருணாநிதி. ஏற்கனவே பல கோடிக்கணக்கில் நடந்த அபிவிருத்தி பணிகள் தவிர்த்து கூடுதலாக சுகாதாரம் மற்றும் சாலைப்பணிகள் மேம்பாட்டுக்கு இந்த நிதி வழங்கப்படும் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வந்த, தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் முதற்கட்டப் பணிகள் 2010 மார்ச்சுத் திங்களுடன் முடிவடைந்தன. இரண்டாம் கட்டமாக இத்திட்டத்தை மேலும் மூன்றாண்டு காலத்திற்குச் செயல்படுத்திட வேண்டுமென முதவர் கருணாநிதி மத்திய அரசு மூலம் உலக வங்கியைக் கோரியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உலக வங்கி, 627 கோடியே 72 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 2013 செப்டம்பர் வரை மூன்றாண்டுகளுக்கு இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தைச் செயல்படுத்திட ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் பயனாக, 564 கோடியே 94 இலட்ச ரூபாய் உலகவங்கி நிதியுதவியுடன் தமிழக அரசு ஏற்கும் 62 கோடியே 78 லட்ச ரூபாயும் சேர்ந்து மொத்தம் 627 கோடியே 72 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயல் படுத்தப்படும்.



இது பற்றி மேலும் அறிய இங்கு சொடுக்கவும்

http://tinyurl.com/2cynh5x

Saturday, July 03, 2010

இங்கு இதில் தமிழ் செய்வோம்

மிழுக்காக எல்லோரும் ஏதோ ஒன்று செய்யும் போழ்து என்னால் இயன்ற இச்சிறுவுதவி தமிழை முடிந்த/மறந்த இடத்தில எல்லாம் புகுத்த எண்ணிக்கொண்டிருந்தபோது என் சிந்தையில் உதித்ததிது
வேறு பல மொழிகட்கும் இல்லாத சிறப்பு நம் தமிழ் மொழியில் எண்களுக்கு எழுத்துரு இருப்பது இவ்வெழுத்துருவை நம் சந்ததியினர் பலரும் மறந்து/இழந்து வருகிறோம். ஆகவே எல்லோர் வீட்டிலும், எங்கேயும் இருக்கும் அளவிற்கு இதை கொண்டு வர என்னால் முடிந்த முயற்சி இதோ இப்படத்தில் பார்ப்பதுதான் அது





இரண்டுமுரையிலுமே சிலர் உபயோகிக்கக்கண்டேன் ஆதலால் தங்களுக்கு சரியென்பதை உபயோகிக்கவும்



ஆம் நாம் எந்தவொறு வேறுபாடுமின்றி எல்லா இடத்திலும் எப்போதும் உபயோகிக்கும் கடிகாரந்தானது இதற்கு மொழி ஒரு தடையல்ல ஆனாலும் மொழிக்கு முக்கியத்துவம் இல்லாத இவ்விடத்தில் இதை புகுத்தக்காரணம், நாம் நேரம் பார்க்க அவற்றில் இருக்கும் எழுத்துக்கள் முக்கியமில்லை (எ.டு) நம் பெரும்பாலான சுவர்கடிகாரத்திலும், கைக்கடிகாரத்திலும் ரோமானியா எழுதுக்களைதாங்கி வருகின்றன அதை பயன்படுத்த யாருக்கும் சிரமமில்லை அதுபோல் இதையும் பயன்படுத்துவோம், " சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் வாய்ப்பழக்கம் " என்பதற்க்கேற்ப (இங்கே தமிழுக்கே இந்த எடுத்துக்காட்டு என்ன கொடுமையிது ) காலப்போக்கில் இத்தமிழ் எழுத்துரு நமக்குப்பழகிப்போகும் , ஆகவே நாம் நம்மால் இயன்ற இடத்திலெல்லாம் இக்கடிகாரத்தை நிறுவுவோம் இனி வளரும் எதிர்காலம் இதில் பயன்பெறும் .

வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !

இப்படிக்கு







(எழுத்துப்பிழைகளுக்கு மன்னிக்கவும். சரியான தமிழ் உள்ளிட்டுக்கருவி இல்லை.)