Wednesday, July 14, 2010

மன்னிக்கவும் வேலைப்பழுவில் மறந்துவிட்டேன் !@#$*&+

நம் அருமை குழந்தைகளின் பிறந்த நாளை மறந்துவிட்டு விழிபிதுங்கி செய்வதறியாது நிற்க வேண்டியதில்லை அதற்கு ஒரு ஆக்கப்பூர்வமான வழி.

இனி நமது மணநாளை மறந்து அவளிடம்/அவரிடம் ஊடல் கொள்ள வேண்டியதில்லை மணநாளையும் இதுபோலிட்டுக்கொள்ளலாம்.

Monday, July 12, 2010

தமிழர் அறிய வேண்டிய தமிழர்

ஆதி முதல் இன்று வரை


மாதவச் சிவஞான முனிவர்
மு. வரதராசனார்
வீரமாமுனிவர்
சுப்பிரமணிய பாரதி
பரிதிமாற் கலைஞர்
உ . வே . சாமிநாத ஐயர்
சி. வை. தாமோதரம்பிள்ளை

மா.நன்னன்
வி.வைரமுத்து

இப்பட்டியல் முழுமையற்றது மிகச்சிலரை மட்டுமே குறிக்கிறது
அனைவரையும் ஒரு இடுகையில் அடக்குவதென்பது இயலாத காரியம் சிலமட்டுமே மேலே குறிப்பிடப்பெற்றுள்ளது

தமிழறிஞர் தேடுபட்டியல்

மழலைகளுக்கு இனிய தமிழ்ப்பெயர்கள்

மழலையர்களுக்கு இனிய தமிழில் பெயர் சூட்டும் பொருட்டு வலையில் தேடிய போது கிடைத்த சில நல்ல தளங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் பெயர் பட்டியல் இதோ இங்கு சொடுக்கி பெற்றுக்கொள்ளவும்

தமிழ்ப்பெயர்கள் தொடர்பு ௧

தமிழ்ப்பெயர்கள் தொடர்பு ௨

அன்புத்தமிழ் மற்றும் தமிழ்கூடல்என்னும் வலையில் ஆண்
பெண் குழந்தை பெயர்கள் தனித்தனியே பட்டியலிட்டிருக்கின்றன

Wednesday, July 07, 2010

என்ன கொடுமையிது

சென்னை: தமிழக அபிவிருத்தி திட்டத்திற்காக உலக வங்கியிடம் சுமார் 3 ஆயிம் கோடிகளை மேலும் கடன் வாங்கினார் தமிழக முதல்வர் கருணாநிதி. ஏற்கனவே பல கோடிக்கணக்கில் நடந்த அபிவிருத்தி பணிகள் தவிர்த்து கூடுதலாக சுகாதாரம் மற்றும் சாலைப்பணிகள் மேம்பாட்டுக்கு இந்த நிதி வழங்கப்படும் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வந்த, தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் முதற்கட்டப் பணிகள் 2010 மார்ச்சுத் திங்களுடன் முடிவடைந்தன. இரண்டாம் கட்டமாக இத்திட்டத்தை மேலும் மூன்றாண்டு காலத்திற்குச் செயல்படுத்திட வேண்டுமென முதவர் கருணாநிதி மத்திய அரசு மூலம் உலக வங்கியைக் கோரியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உலக வங்கி, 627 கோடியே 72 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 2013 செப்டம்பர் வரை மூன்றாண்டுகளுக்கு இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தைச் செயல்படுத்திட ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் பயனாக, 564 கோடியே 94 இலட்ச ரூபாய் உலகவங்கி நிதியுதவியுடன் தமிழக அரசு ஏற்கும் 62 கோடியே 78 லட்ச ரூபாயும் சேர்ந்து மொத்தம் 627 கோடியே 72 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயல் படுத்தப்படும்.



இது பற்றி மேலும் அறிய இங்கு சொடுக்கவும்

http://tinyurl.com/2cynh5x

Saturday, July 03, 2010

இங்கு இதில் தமிழ் செய்வோம்

மிழுக்காக எல்லோரும் ஏதோ ஒன்று செய்யும் போழ்து என்னால் இயன்ற இச்சிறுவுதவி தமிழை முடிந்த/மறந்த இடத்தில எல்லாம் புகுத்த எண்ணிக்கொண்டிருந்தபோது என் சிந்தையில் உதித்ததிது
வேறு பல மொழிகட்கும் இல்லாத சிறப்பு நம் தமிழ் மொழியில் எண்களுக்கு எழுத்துரு இருப்பது இவ்வெழுத்துருவை நம் சந்ததியினர் பலரும் மறந்து/இழந்து வருகிறோம். ஆகவே எல்லோர் வீட்டிலும், எங்கேயும் இருக்கும் அளவிற்கு இதை கொண்டு வர என்னால் முடிந்த முயற்சி இதோ இப்படத்தில் பார்ப்பதுதான் அது





இரண்டுமுரையிலுமே சிலர் உபயோகிக்கக்கண்டேன் ஆதலால் தங்களுக்கு சரியென்பதை உபயோகிக்கவும்



ஆம் நாம் எந்தவொறு வேறுபாடுமின்றி எல்லா இடத்திலும் எப்போதும் உபயோகிக்கும் கடிகாரந்தானது இதற்கு மொழி ஒரு தடையல்ல ஆனாலும் மொழிக்கு முக்கியத்துவம் இல்லாத இவ்விடத்தில் இதை புகுத்தக்காரணம், நாம் நேரம் பார்க்க அவற்றில் இருக்கும் எழுத்துக்கள் முக்கியமில்லை (எ.டு) நம் பெரும்பாலான சுவர்கடிகாரத்திலும், கைக்கடிகாரத்திலும் ரோமானியா எழுதுக்களைதாங்கி வருகின்றன அதை பயன்படுத்த யாருக்கும் சிரமமில்லை அதுபோல் இதையும் பயன்படுத்துவோம், " சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் வாய்ப்பழக்கம் " என்பதற்க்கேற்ப (இங்கே தமிழுக்கே இந்த எடுத்துக்காட்டு என்ன கொடுமையிது ) காலப்போக்கில் இத்தமிழ் எழுத்துரு நமக்குப்பழகிப்போகும் , ஆகவே நாம் நம்மால் இயன்ற இடத்திலெல்லாம் இக்கடிகாரத்தை நிறுவுவோம் இனி வளரும் எதிர்காலம் இதில் பயன்பெறும் .

வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !

இப்படிக்கு







(எழுத்துப்பிழைகளுக்கு மன்னிக்கவும். சரியான தமிழ் உள்ளிட்டுக்கருவி இல்லை.)